ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

புதினை சந்திக்கச் செல்லும் வட கொரிய அதிபர்!

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 

News image

கிம்ஜாங் உன் / விளாதிமீர் புதின்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:27 am IST

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் வடகிழக்கு எல்லை வாயிலாக ரயிலில் அதிபர் கிம்ஜாங் உன் பயணம் செய்து ரஷியாவுக்கு வரவுள்ளதாகவும், ரயிலில் ரஷியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களும் இடம்பெறும் என தென்கொரிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ரஷியாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் பகுதியில் நாளை (செப். 12) இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆயுதப் படையை பலப்படுத்தும் வகையில், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது. 

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் எச்சரித்திருந்தார்.

ரஷியாவிலுள்ள வாக்னர் படைக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.