அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பெண்ணின் மூளையில் உயிருடன் 8 செமீ நீள புழு! மருத்துவர்கள் அதிர்ச்சி!!

ஆஸ்திரேலியாவில் பெண்ணின் மூளையில் இருந்து 8 செமீ நீளமுள்ள உயிருள்ள புழு எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

பெண்ணின் மூளையில் இருந்து அகற்றப்பட்ட புழு

Updated On :30 ஆகஸ்ட் 2023, 12:29 pm IST

ஆஸ்திரேலியாவில் பெண்ணின் மூளையில் இருந்து 8 செமீ நீளமுள்ள உயிருள்ள புழு எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் கான்பெரா மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 64 வயதுள்ள பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்போது அவரது மூளையில் மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் மூளையுடன் ஒட்டியிருந்த ஒரு பொருளை எடுக்க முற்பட்டனர். பின்னர் அது வளைந்து நெளிந்துள்ளது. 8 செமீ அளவில் ஒரு உயிருள்ள சிவப்பு ஒட்டுண்ணி என்பது கண்டறிந்து மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பெண்ணிற்கு சிகிச்சையளித்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஞ்சய சேனாநாயக்க கூறுகையில், 'நோயாளி மூன்று மாதங்களாக மறதி மற்றும் மோசமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் எடுத்ததில் அவரது மூளையில் மாற்றங்கள் தெரிந்தது. மூளையில் புற்றுநோய் அல்லது சீழ் இருக்கலாம் என்று எதிர்பார்த்தோம். 

Story image

ஆனால் அறுவை சிகிச்சையில் பெண்ணின் மூளையின் முன் பகுதியில் உயிருள்ள ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. இந்த புழுக்கள் மனித மூளையில் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு மூளையில் இருந்து அந்த புழு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் குணமடைந்து வருகிறார்' என்று தெரிவித்தார். 

கார்பெட் மலைப்பாம்புகள் இருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் பெண்ணிற்கு பாம்புடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவர் உட்கொண்ட தாவரங்கள் அல்லது முட்டைகளில் இருந்து இவ்வாறு நடந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.