தேர்தல் வருகிறது என்பதற்கு இதுதான் அறிகுறி என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசை விமரிசித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக எல்பிஜி விலையை ரூ.200 குறைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.200 குறைந்து ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!
ரூ. 1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!
வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
தà¯à®°à¯à®¤à®²à¯ வரà¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®ªà®¤à®±à¯à®à¯ à®à®©à¯à®© à®à®±à®¿à®à¯à®±à®¿?
à®à®®à¯à®¯à®²à¯ à®à®¾à®¸à¯ விலà¯à®¯à¯ à®°à¯200 à®à¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®±à®¿à®à¯à®±à®¿!
à®°à¯1100 à®à¯à®à¯ à®®à¯à®²à¯ வில௠வà¯à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à®³à¯à®à¯ à®à®à®à¯à®à®¿à®ªà¯ பிழிநà¯à®¤ à®à®°à®à¯ திà®à¯à®°à¯à®©à¯à®±à¯ விழிதà¯à®¤à¯à®à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à®¤à¯ பாரà¯à®°à¯!
வà¯à®³à¯à®³à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®¯à®¿à®²à¯ விரà¯à®µà®¿à®²à¯ à®à®¾à®£à¯à®! பà¯à®à¯à®°à¯à®²à¯, à®à¯à®à®²à¯ விலà¯à®à®³à¯ à®à¯à®±à¯à®ªà¯à®ªà¯!â P. Chidambaram (@PChidambaram_IN) August 30, 2023
நடப்பாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










