தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லைப் பகுதி!

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 8:15 am

DIN

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியாவுக்கான துருக்கியின் சிறப்புத் தூதர் செர்டார் கிலிக், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியான துருக்கியப் பகுதியில் உள்ள அலிகன் சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்லும் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

"துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எங்கள் மக்களின் துன்பங்களைப் போக்க ஆர்மீனியா மக்கள் அனுப்பிய ஏராளமான உதவியை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்" என்று கிலிக் கூறினார். மேலும் ஆர்மேனிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

1988 இல் நிலநடுக்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஆர்மீனியாவிற்கு துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து உதவிகளை அனுப்ப கடைசியாக இந்த எல்லைப் பகுதி பயன்படுத்தப்பட்டது.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.