நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது.
இதுகுறித்து லிபிய அதிகாரி ஜிப்ரில் ஷ்டெவி, கூறியதாவது, நாங்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மருத்துவ, அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களை விமானங்களில் அனுப்பியுள்ளோம். லிபிய குழுக்கள் இதுவரை 27 பேரை காப்பாற்றியுள்ளன, 53 உடல்களை மீட்டுள்ளன.
அதோடு தெற்கு துருக்கியில் 400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் லிபிய அரசு, 55 மீட்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நான்கு துப்பறியும் நாய்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 30,000 க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



