காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார்.
மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பாஜக தலைவர்கள் பலரும் முற்றுகையிட உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். மால்கி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(பிப். 21) மேகாலயா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு திடீர் பயணம் ஏன்? - ஜோ பைடன் விளக்கம்!