இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வரி செலுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்த ஜப்பான் துணை நிதி அமைச்சர்!

வரி செலுத்தாத காரணத்தால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்தார் ஜப்பான் துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டா.

News image
Updated On :13 நவம்பர் 2023, 7:02 am

DIN

ஜப்பானின் துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டா தனது நிறுவனம் வரி செலுத்தவில்லை என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரின் ராஜிநாமா ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கென்ஜி காண்டாவின் ராஜிநாமா கடிதத்தை ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகியிடம் சமர்ப்பித்ததையடுத்து, அவரின் பதவி விலகலை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 

வரி செலுத்தாத காரணத்தால் 2013 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் அரசாங்கம் இவரது நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை நான்கு முறை பறிமுதல் செய்ததாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கென்ஜி காண்டோவே ஒப்புக்கொண்டார்.  

இதனையடுத்து ஜப்பானிய நிதி அமைச்சகத்தில் காண்டா பங்கு வகிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.

கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் பேசிய கென்ஜி, ​​"தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிஸியாகிவிட்டதால், இந்த விவகாரங்கள் குறித்து அறியவில்லை” என்று பேசினார்.

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கென்ஜி காண்டா வரி செலுத்தாதது, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். அதனையடுத்து காண்டா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான கென்டா இசுமி, துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் காண்டா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கடந்த செப்டம்பரில் தனது அமைச்சரவையை மாற்றியமைத்ததில் இருந்து ஏற்கனவே இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலகினர். தாரோ யமடாவுக்கு திருமணத்தை தாண்டிய தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, நாடாளுமன்ற துணைக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சட்டத்துறைக்கான துணை அமைச்சர் மிட்டோ காகிசாவா ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவும் பதவி விலகியுள்ளது அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.