வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து முன்னணி வீரராக உள்ளார்.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளதாக அவமி லீக் கட்சியின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷகிப் அல் ஹசனின் விண்ணப்பத்தை அவமி லீக் கட்சியின் நாடாளுமன்றக் குழு பரிசீலனை செய்த பிறகு போட்டியிடுவது உறுதி செய்யப்படும்.
இதையும் படிக்க | இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோடி ஆறுதல்!(விடியோ)
ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுரா, வங்கதேச தலைநகரான தக்கா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக அவமி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரிட்டன் புதிய பிரதமா் ஆண்டி பா்ன்ஹாமுக்கு மோடி வாழ்த்து

இணையக் குற்றங்களை தடுக்க 7 நகரங்களில் ஒருங்கிணைப்புக் குழுக்கள்: மத்திய அரசு தகவல்

2026-ஆம் நிதியாண்டின் கடன்-ஜிடிபி விகிதம் 58.2 சதவீதமாக குறைவு; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்






