3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்!

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார்.

ஷகிப் அல் ஹசன்

Published On :2 பிப்ரவரி 2024, 8:53 am IST

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து முன்னணி வீரராக உள்ளார்.

இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளதாக அவமி லீக் கட்சியின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷகிப் அல் ஹசனின் விண்ணப்பத்தை அவமி லீக் கட்சியின் நாடாளுமன்றக் குழு பரிசீலனை செய்த பிறகு போட்டியிடுவது உறுதி செய்யப்படும்.

ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுரா, வங்கதேச தலைநகரான தக்கா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக அவமி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.