மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்! 

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 12:37 pm IST

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்பினரின் தீவிர தாக்குதலால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

Story image

இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 

பாலஸ்தீனப் பகுதியான காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். ஆனால், இந்த தாக்குதல் எப்போது என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனால் காஸா மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஏற்கெனவே இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்துள்ள நிலையில் தரைவழித் தாக்குதல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

Story image

முன்னதாக, காஸாவின் மக்கள்தொகையில் பாதி பேரான சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள், வடக்கு மற்றும் காஸா பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று இரவும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, எகிப்தில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

பாலஸ்தீனியர்கள் தரப்பில் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் குழுவை முழுவதும் அழிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.