சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்! 

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:41 am IST

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்பினரின் தீவிர தாக்குதலால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

Story image

இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 

பாலஸ்தீனப் பகுதியான காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். ஆனால், இந்த தாக்குதல் எப்போது என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனால் காஸா மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஏற்கெனவே இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்துள்ள நிலையில் தரைவழித் தாக்குதல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

Story image

முன்னதாக, காஸாவின் மக்கள்தொகையில் பாதி பேரான சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள், வடக்கு மற்றும் காஸா பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று இரவும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, எகிப்தில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

பாலஸ்தீனியர்கள் தரப்பில் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் குழுவை முழுவதும் அழிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.