அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இன்ஸ்டாகிராமால் மன அழுத்தம், தூக்கமின்மை! மெட்டா மீது வழக்கு!!

குழந்தைகள், இளைஞர்களின் மனஅழுத்தத்துக்கு காரணமாவதாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2023, 1:06 pm

DIN

குழந்தைகள், இளைஞர்களின் மனஅழுத்தத்துக்கு காரணமாவதாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கலிஃபோர்னியா, நியூ யார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 33 மாகாணங்களில் மெட்டா மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, தங்களது வலைதளத்தின் மூலம் குழந்தைகளையும் இளைஞர்களையும் தவறாக வழிநடத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் லாபம் மட்டும் தான் என ஓக்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள், இளைஞர்கள் அதிக நேரம் அதில் இருப்பதால், அவர்களை நுகர்வோர்களாக மாற்றி, அதில் கூடுதல் நேரம் இயங்குவதற்கு அவர்களை நிலைப்படுத்துகிறது. அவர்கள் லாபத்துக்காக அதிக விளம்பரங்கள் பெறுவதற்கு இளம் பயனர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். 

சமூகவலைதள பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் குழந்தைகளின் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம், கற்றல் குறைபாடு, மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல எதிர்மறை நிகழ்வுகளுக்கு காரணமாவதாக தெரிவிக்கின்றன. 

இந்த வழக்கு குறித்து மெட்டா நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இத்தகைய வழக்குகஆல் அதிருப்தி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல செயலிகளுக்கு வயது வாரியான தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதை சட்டம் பரிசீலிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டன்னிலும் இன்று மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.