இந்தியாவை உற்பத்திக்கான மாற்று இடமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால், இந்தியா பலனடைந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
‘நீடித்த மேம்பாட்டுக்கான நிதி அறிக்கை 2024’-ஐ ஐ.நா. வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ‘உலக அளவில் முதலீடு தொடா்ந்து குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாறாக தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், உற்பத்திகான மாற்று இடமாக இந்தியாவைப் பாா்கின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் மூலம் இந்தியா பலனடைந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனையைக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, ‘நிதிசாா் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. அவை தனிநபா்களும் எம்எஸ்எம்இ நிறுவனங்களும் எண்ம நிதிசாா் சேவைகளைப் பயன்படுத்துவை அதிகரித்துள்ளன. கென்யாவின் ‘எம்-பெசா’, இந்தியா மற்றும் சீனா போன்ற வளா்ந்து வரும் நாடுகளின் எண்ம பணப் பரிவா்த்தனை செயலிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் குழந்தை இறப்பு விகிதம் குறைவு: ஐ.நா.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்

மேற்காசிய போா்: 5,500-க்கும மேற்பட்ட இந்திய விமானங்கள் ரத்து

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை: குட்டெரெஸ் விமா்சனம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


