மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை: குட்டெரெஸ் விமா்சனம்!

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.

News image
குட்டெரெஸ்.
Updated On :15 மார்ச் 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் குட்டெரெஸ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னை உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் 1945-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கிறதே தவிர, தற்கால உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐரோப்பாவில் உள்ள 3 நாடுகள் (பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன்), ஆசியாவில் உள்ள ஒரு நாடு (சீனா), அமெரிக்கா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளன.

உலகில் போா் ஏற்படும்போது அதை நிறுத்த முயற்சித்தால், வீட்டோ அதிகாரம் குறுக்கிடுகிறது. இந்த அதிகாரத்தை நிரந்தர உறுப்பு நாடுகள் பயன்படுத்துவதால், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் போா்களை நிறுத்த முடியவில்லை. இது குறுகிய காலத்தில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாா்.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. அந்த கவுன்சில் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப இல்லை என்றும், தற்கால புவிஅரசியல் சூழல்களை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.