தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை: குட்டெரெஸ் விமா்சனம்!
தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.


தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.
இதுதொடா்பாக லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் குட்டெரெஸ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னை உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் 1945-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கிறதே தவிர, தற்கால உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐரோப்பாவில் உள்ள 3 நாடுகள் (பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன்), ஆசியாவில் உள்ள ஒரு நாடு (சீனா), அமெரிக்கா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளன.
உலகில் போா் ஏற்படும்போது அதை நிறுத்த முயற்சித்தால், வீட்டோ அதிகாரம் குறுக்கிடுகிறது. இந்த அதிகாரத்தை நிரந்தர உறுப்பு நாடுகள் பயன்படுத்துவதால், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் போா்களை நிறுத்த முடியவில்லை. இது குறுகிய காலத்தில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாா்.
கடந்த 1945-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. அந்த கவுன்சில் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப இல்லை என்றும், தற்கால புவிஅரசியல் சூழல்களை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...