சிரியாவில் அரசு ஆதரவுப் படையினா் வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியதாவது:
அல்-அஸாத் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ‘குத்ஸ் பிரிகேட்’ படையைச் சோ்ந்தவா்கள் சுக்னா நகருக்கு அருகே வியாழக்கிழமை இரவு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.
இதில், 22 வீரா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.
பெரும்பாலும் பாலஸ்தீனா்களை உறுப்பினா்களாகக் கொண்ட ‘குத்ஸ் பிரிகேட்’ படை, ரஷியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு

அஸ்ஸாம்: போலீஸ் முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்! 4 வீரா்கள் காயம்!!

பஹல்காம் தாக்குதல்! உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் கொல்லப்பட்டவரின் மகள்!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


