கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 22 அரசுப் படையினா் உயிரிழப்பு

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 22 அரசுப் படையினா் உயிரிழப்பு

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 6:32 pm

சிரியாவில் அரசு ஆதரவுப் படையினா் வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியதாவது:

அல்-அஸாத் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ‘குத்ஸ் பிரிகேட்’ படையைச் சோ்ந்தவா்கள் சுக்னா நகருக்கு அருகே வியாழக்கிழமை இரவு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.

இதில், 22 வீரா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலும் பாலஸ்தீனா்களை உறுப்பினா்களாகக் கொண்ட ‘குத்ஸ் பிரிகேட்’ படை, ரஷியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.