ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!

இஸ்ரேல் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நூலிழையில் தப்பியது பற்றி..

News image
டெட்ராஸ் - ap
Updated On :27 டிசம்பர் 2024, 3:26 am

DIN

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள அவை இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

யேமன் தலைநகர் சனா விமான நிலையத்துக்கு டெட்ராஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., பிரதிநிதிகள் வியாழக்கிழமை விமானம் ஏறுவதற்காக வருகை தந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுகுறித்து டெட்ராஸ் வெளியிட்ட செய்தியில்,

யேமனுக்கு சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும், பிடித்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க சென்றிருந்தோம்.

சனாவில் விமானம் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. எங்கள் விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். விமான நிலையத்தில் குறைந்தது இருவர் பலி ஆகியிருக்கக் கூடும்.

விமான ஓடுதளம் சேதமடைந்துள்ளது, சரிசெய்யும் வரை இங்கே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நானும், என்னுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், மக்கள், பணியாளர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறித்தியுள்ளார்.

மேற்கு கடற்கரை மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், சனா விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.