கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதலாளியின் கொச்சைப் பேச்சு: வேலையைவிட்டுச் சென்ற ஊழியர்!

ஒரு நிலையான வேலை, நமக்கு பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 3:15 pm

DIN

கொச்சை வார்த்தையால் முதலாளி திட்டியதால், மனமுடைந்த ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக உடனடியாக முதலாளிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

மேலும், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு அவர் மின்னஞ்சல் செய்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு நிலையான வேலை, நமக்கு பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வைக்கிறது. அந்த வேலையை ஒரு நொடிப்பொழுதில் முடிவு செய்து துறந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர்.

இதேபோன்று சமூக வலைதளம் நமக்குத் தேவையான கருத்துகளை சுதந்திரமாகப் பதிவிட உதவுகிறது. அந்தவகையில் தான் வேலையைத் துறந்ததன் காரணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Story image

அமெரிக்காவில் பிரபல சமூக வலைதள செயலியான (Reddit) ரெடிட்-ல் தனது முதலாளிக்கு அனுப்பியுள்ள பணி விலகல் மின்னஞ்சலை புகைப்படமெடுத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், முதலாளி தன்னை தகாத வார்த்தை கூறி திட்டியதால், உடனே இந்த மின்னஞ்சலை அவருக்கு அனுப்பி பணியிலிருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறேன். சுமூகமாக வேலை செய்ய தனக்கு புதிய கணினி வேண்டும் எனத் தொலைபேசியில் அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. நானே கணினியை சரிசெய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை நான் இலவசமாக செய்துகொள்ள முடியாது எனக் குறிப்பிட்டேன். எனக்கு அதற்கு நேரமும் இல்லை.

இதற்குத் தகாத வார்த்தை கூறி, அதைச் செய்துவிட்டு மாற்றிக்கொள் என கட்டளையிட்டார். அதனால் பணியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். இனி ஊழியர்களை இவ்வாறு திட்டுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கிரேசில் ஐரிஷ் என்பவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.