ஆப்கானிஸ்தானில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் காபுலில் உள்ள முக்கிய சிறையின் பணியாளர்களுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சட்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதல் நகரின் கிழக்குப்பகுதியில் நடந்ததாகவும், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.