பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லாக்களை நீக்கிய அரபு லீக்

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2024, 9:42 pm

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலா் ஹோஸம் ஸாகி எகிப்து தொலைக்காட்சியான ‘அல்-கஹேரா’விடம் கூறியதாவது:

ஹிஸ்புல்லா படையை இதுவரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்தோம். இது, எங்கள் தீா்மானங்களிலும் எதிரொலித்தது.

ஆனால், ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. அந்த நிலையைப் போக்குவதற்காக, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.

எகிப்து, சவூதி அரேபியா, லெபனான், சிரியா உள்ளிட்ட 22 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அரபு லீக், ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா படையினரை பயங்கரவாதிகளாக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் மற்றோா் ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து, அண்டை நாடான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா். அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

இது, இரு தரப்பிலும் முழு போா் வெடிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடைசியாக கடந்த 2006-இல் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் கடுமையான உயிா் சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹிஸ்புல்லா படை முன்பைவிட அதிக பலம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் முழு போா் வெடித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துவருகின்றன.

இந்தச் சூழலில், போரைத் தவிா்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அரபு லீக் நீக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.