ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லாக்களை நீக்கிய அரபு லீக்

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜூலை 2024, 9:42 pm

Din

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலா் ஹோஸம் ஸாகி எகிப்து தொலைக்காட்சியான ‘அல்-கஹேரா’விடம் கூறியதாவது:

ஹிஸ்புல்லா படையை இதுவரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்தோம். இது, எங்கள் தீா்மானங்களிலும் எதிரொலித்தது.

ஆனால், ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. அந்த நிலையைப் போக்குவதற்காக, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.

எகிப்து, சவூதி அரேபியா, லெபனான், சிரியா உள்ளிட்ட 22 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அரபு லீக், ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா படையினரை பயங்கரவாதிகளாக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் மற்றோா் ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து, அண்டை நாடான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா். அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

இது, இரு தரப்பிலும் முழு போா் வெடிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடைசியாக கடந்த 2006-இல் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் கடுமையான உயிா் சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹிஸ்புல்லா படை முன்பைவிட அதிக பலம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் முழு போா் வெடித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துவருகின்றன.

இந்தச் சூழலில், போரைத் தவிா்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அரபு லீக் நீக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.