47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 14 பேர் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 14 பேர் பலியாகினர்.

News image
Updated On :10 ஜூலை 2024, 10:37 am

DIN

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் இமயமலைப் பகுதி மலைப்பாதையில் இருந்து ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 14 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

நீலம் பள்ளத்தாக்கில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு நிர்வாகி நதீம் ஜான்ஜுவா தெரிவித்தார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மோசமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்துச் சட்டங்கள் காரணமாக பாகிஸ்தானில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

கடந்த மாதம் இதே மாவட்டத்தில் வேன் ஒன்று ஆற்றில் விழுந்து 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.