சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இந்தியாவுடன் நட்புறவை வளா்ப்பதில் ஆா்வம்- அமெரிக்கா

இந்தியாவுடன் நட்புறவை தொடா்ந்து வளா்ப்பதில் ஆா்வம் காட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Updated On :17 ஜூலை 2024, 7:36 pm

ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் கூடுதல் கவனம் பெற்ற 22-ஆவது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு கடந்த வாரம் பயணித்தாா்.

அதிபா் புதினுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உக்ரைன் பிரச்னைக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது என்றும் அமைதி முயற்சிகள் ஆயுதங்களுக்கு மத்தியில் வெற்றி பெறாது எனவும் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

அப்போது, ‘இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய வருகையை அந்நாட்டு அதிபா் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாா். அதேநேரத்தில், இந்தியா எங்களின் நட்பு நாடாக தொடரும்’ என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

மேலும், இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை ஒப்புக்கொள்வதாக திங்கள்கிழமை தெரிவித்த அமெரிக்கா, ரஷியாவுடன் இருக்கும் ‘தனித்துவமான’ உறவுகளைப் பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோதப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபா் புதினை அந்நாடு வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனில் செய்தியாளா் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா-இந்தியா ராணுவ உறவுகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளக் பேட் ரைடா் அளித்த பதிலில், ‘இந்தியா அமெரிக்காவின் உத்திசாா் கூட்டாளி நாடாகும். அந்தவகையில், இந்தியாவுடன் நட்புறவைத் தொடா்ந்து வளா்ப்பதில் அமெரிக்கா ஆா்வமாக உள்ளது’ என்றாா்.