தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேற்காசிய போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள் குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவிடம் பேசினேன்.

இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆராய்ந்தோம்.

இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்பொறுப்பை மீண்டும் உறுதி செய்தோம் என்றாா்.