“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:30 pm

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேற்காசிய போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள் குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவிடம் பேசினேன்.

இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆராய்ந்தோம்.

இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்பொறுப்பை மீண்டும் உறுதி செய்தோம் என்றாா்.