மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாட்டின் பெயர் தவறாக உச்சரிப்பு: மன்னிப்புக் கேட்ட ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்

தென்கொரியாவுக்கு பதில் வடகொரியா என தவறாக உச்சரிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டனர் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்.

News image
பாரீஸ் ஒலிம்பிக்
Updated On :27 ஜூலை 2024, 10:17 am

பிடிஐ

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கி, பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தென் கொரிய வீரர்களை, வடகொரிய வீரர்கள் என அறிமுகப்படுத்திய ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அதற்காக மன்னிப்புக் கோரினர்.

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகிறது.

2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது 33-ஆவது ஒலிம்பிக் போட்டி. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

பாரீஸில் நடைபெற்ற துவக்கி விழாவின்போது, அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை செய்னி ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் தென்கொரிய வீரர், வீராங்கனைகளை தங்களது தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்தபோது, அவர்களை வடகொரிய வீரர்கள் என்று பொருள்படும் விதத்தில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சர்வதேச ஒலிம்பிக் குழு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், துவக்க விழாவில் தவறான பெயர் உச்சரிப்புக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக, தென்கொரிய நாட்டின் கலாசார விளையாட்டுகள் மற்றும் சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ஜாங் மி ரான் இது குறித்து ஒலிம்பிக் குழுவை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.