கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜெரூசலேமில் இஸ்ரேல் தேசியவாதிகள் பேரணி: மோதல் உருவாகுமா?

பழைய ஜெரூசலேமில் இஸ்ரேல் தேசியவாதிகள் பேரணி. இஸ்லாமியர்கள் அகற்றம்

News image

கோப்புப் படம்

AP/ Maya Alleruzzo

Updated On :5 ஜூன் 2024, 12:57 pm

DIN

பாலஸ்தீனர்கள் அதிகம் வாழும் பழைய ஜெரூசலேம் நகரின் தெருக்களில் இஸ்ரேலிய தேசியவாதிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கும் வருடாந்திர பேரணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் பெரிதாக பாதிக்கப்படாது அமைதி நிலவி வந்த ஜெரூசலேமில் இந்த பேரணி மோதலை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

1967 மத்தியகிழக்கு போரில் இஸ்ரேல் ஜெரூசலேமை கைப்பற்றிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இஸ்ரேல் ஜெரூசலேம் முழுவதையும் தலைநகராக கருதுகிற போதும் சர்வதேசளவில் ஜெரூசலேமின் கிழக்கு பகுதியை பன்னாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனர்களை பொருத்தவரை கிழக்கு ஜெரூசலேம் எதிர்காலத்தில் அமையவிருக்கும் அவர்களின் பாலஸ்தீன அரசுக்கான தலைநகராக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் பேரணி நடைபெறும் இடங்களில் இருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக காவலர்கள் அகற்றினர். அதிதீவிர இஸ்ரேலிய தேசியவாத இளைஞர்கள் பாலஸ்தீனத்துக்கு எதிரான கோஷங்களை பேரணியில் எழுப்புவர்.

புராதன மார்க்கத்திலேயே பேரணி நடைபெறும் என தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்க்விர் தெரிவித்துள்ளார். அதன்படி டமாஸ்கஸ் நுழைவாயில் வழியாக முஸ்லீம் குடியிருப்பில் நுழைந்து வெஸ்டர்ன் வாலில் (மேற்கு சுவர்- யூதர்களின் வழிபாட்டு இடம்) பேரணி முடிவடையவுள்ளது.

பேரணி செல்லும் வழியில் இஸ்லாமியர்களின் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அமைதியை நிலைநாட்ட 3000-க்கும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.