மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மக்களை அச்சுறுத்தி வந்த முதலையைக் கொன்று விருந்து சமைத்து சாப்பிட்ட மக்கள்

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2024, 12:02 pm IST

ஆஸ்திரேலியாவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையைக் கொன்று, சமைத்து சாப்பிட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

வடக்கு ஆஸ்திரேலியாவின் ஒரு கிராமத்தில், சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, மேற்கத்திய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தினால் அடித்து வரப்பட்ட பல முதலைகள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன. அதாவது, மக்கள் நடமாடும் பகுதிகளில் முதலைகளும் நடமாடுவதாய் இருந்தன.

இந்நிலையில், மக்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து 250மீ தொலைவில் 3.63மீ நீளமுள்ள உப்புநீர் முதலை ஒன்று, பெய்ன்ஸ் ஆற்றிற்கு அருகில் வரும் பொதுமக்களை துரத்தி, தொல்லையும் செய்துள்ளது. மேலும், அப்பகுதியில் இருக்கும் தெருநாய்களையும் கொன்று, தின்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் கவலையுற்ற அப்பகுதி மக்கள், முதலையினால் ஏற்படுகிற பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர கலந்தாலோசித்தனர். ஆலோசனையின் முடிவில், முதலையை கொல்வது மட்டுமே தீர்வாகும் என முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து முதலையைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி, கொல்லப்பட்ட முதலையை அருகிலிருந்த பழங்குடியினர் வாழும் பகுதிக்குக் கொண்டு சென்று, அந்த முதலையை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.