

தென்கிழக்கு துருக்கியில் காட்டுத் தீ பரவியதில் 5 பேர் பலியானதாகவும் 44 பேர் காயமுற்றதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அறுவடைக்கு பிறகு வயல்வெளிக்கு வைக்கப்பட்ட தீ பரவியதால் சினார் மாவட்டம் மற்றும் மசிடாகி மாவட்டத்தின் இடையே தீ பரவியுள்ளது.
பலத்த காற்று வீசியதில் அதிகளவிலான பரப்பில் தீ விரைவாக பரவியுள்ளது. இருந்தபோதும் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
காட்டில் தீ பரவுவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகளவிலான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை நிலவுவதால் இந்த அபாயம் கணிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் துருக்கியில் காட்டுத்தீ அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதா்பூரில் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

தென்கிழக்கு தில்லியில் 6 வயது மகள், தாய் கொலை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

