ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவப் படை: பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

News image
Updated On :23 ஜூன் 2024, 11:50 pm

Din

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பணவீக்கம், அதிக மின்சாரக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் வணிகா்கள் குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்களும் பங்கேற்றனா். நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து காவல்துறை அதிகாரி உள்பட சிலா் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இதனால் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்தது. இதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படைப்பிரிவுகளை அந்நாட்டு அரசு களமிறக்கியது. அதேபோல் பயங்கரவாதத்துக்கு எதிராக முக்கியத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, அந்நாட்டு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில்,‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு, அரசியல் சூழல் மற்றும் அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்து பிராந்திய பிரதமா் அன்வா் உல்ஹக் மற்றும் உள்நாட்டு அமைச்சா் மொஹ்சின் நக்வி ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது பிராந்தியத்தில் மூன்று மாதக் காலத்துக்கு துணை ராணுவப் படையின் 6 பிரிவுகளை நிலைநிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஜீலம், மங்கலா மற்றும் குல்பா் நீா்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையுடன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டது.