தென் கொரியாவில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 16 பேர் பலி
ஹ்வாசோங் நகரில் பேட்டரி தொழிற்சாலையில் தீ: பலர் காயம்


தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.
சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திங்கள்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். மேலும் 6 பேரைக் காணவில்லை.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் உட்பட வெளிநாட்டினர் என்று உள்ளூர் தீயணைப்பு அதிகாரி கிம் ஜின்-யங் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 102 பேர் பணிபுரிந்தனர்.
இறந்தவர்கள் தரையில் படிக்கட்டுகள் வழியாக தப்பிக்க தவறியிருக்கலாம்.
காணாமல் போனவர்களின் மொபைல் போன் சிக்னல்கள் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் தென்பட்டது. தொழிலாளர்கள் ஆய்வு செய்து பேக்கேஜிங் செய்யும் போது பேட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக ஒருவர் கூறினார்.
இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பபடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...