கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.2 ஆகப் பதிவு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

News image

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated On :28 ஜூன் 2024, 3:12 pm IST

தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பசுபிக் பெருங்கடலில், காரவேலி மாகாணத்தில் அட்டிகிபா மாவட்டத்திற்கு மேற்கே 5 மைல் (8 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. சிலி மற்றும் பொலிவியாவின் எல்லைகளுக்கு அருகில் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 300 மைல் தொலைவில் உள்ளது. இதன் ஆழம் 17 மைல்கள்(20 கி.மீ) ஆகும்.

இந்த நிலநடுக்கமானது அயகுச்சோ, இகா மற்றும் தலைநகரின் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் மற்றும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளதால், பெரு நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.