தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து...

News image

பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலக்கத்தை தொடர்ந்து, இடிந்து விழுந்த 'ஜோலிபீ' துரித உணவகத்தின் முன் கூடியுள்ள காவல்துறையினர். - AFP

Updated On :8 ஜூன் 2026, 8:42 am IST

பிலிப்பின்ஸ்: பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில், ஒருவர் பலியானதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள மின்டானோ மாகாணத்தின் சரங்கனி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5.7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் சுமார் 93 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளன. பூமிக்கடியில் 79 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டடங்கள் சேதமாகின. ஒருவர் பலி, நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்த வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மீட்புப் பணிகளுக்கு பின்னரே சேதங்கள், பலிகள் குறித்த விவரம் தெரிய வரும்.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பூமியின் மேற்பரப்பு முதல் சுமார் 700 கிலோமீட்டர் ஆழம் வரையிலான எந்தப் பகுதியிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என பிலிப்பின்ஸ் நில அதிர்வு மையம் எச்சரித்துள்ளதால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிலிப்பின்ஸில் 0 முதல் 700 கி.மீ வரையிலான இந்த நிலநடுக்க வரம்பு மேலோட்டமானவை, இடைநிலை மற்றும் ஆழமானவை என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.

0 முதல் 70 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை மேலோட்டமான நிலநடுக்கங்கள்; 70 முதல் 300 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை இடைநிலை நிலநடுக்கங்கள் மற்றும் 300 முதல் 700 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை ஆழமான நிலநடுக்கங்கள் ஆகும். பொதுவாக, 70 கி.மீ-க்கும் அதிகமான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் "ஆழமான மைய நிலநடுக்கங்கள்" என்று கூறப்படுகிறது.

பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Summary

powerful earthquake of magnitude 7.8 struck the Philippines on Monday, as reported by the National Centre for Seismology

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.