தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹைட்டி வன்முறை பதவி விலக ஒப்புக்கொண்டாா் அதிபா் ஹென்றி

அதிபர் ஹென்றியின் பதவி விலகல்: ஹைட்டியில் அமைதிக்கான புதிய பாதை

News image
Updated On :12 மார்ச் 2024, 7:23 pm

போா்ட்டோ பிரின்ஸ்: ஹைட்டியில் அரசுக்கு எதிரான ஆயுதக் கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், தனது பதவியிலிருந்து விலக அதிபா் ஏரியல் ஹென்றி ஒப்புக்கொண்டுள்ளாா். கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியில் பல்வேறு ஆயுதக் கும்பல்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அந்தக் குழுக்கள் நடத்தி வரும் வன்முறைச் சம்பவங்களில் ஏராளமானவா்கள் பலியாகியுள்ளனா். இந்தச் சூழலில், கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜிம்மி கிறிஸியா் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆயுதக் கும்பல்களின் கூட்டணி, அப்போதைய அதிபா் ஜோவனேல் மாய்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஊழல் புகாா்களில் சிக்கிய ஜோவனேல் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோா் மீது ஜிம்மி கிறிஸியா் தலைமையிலான கும்பல் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்தச் சூழலில், ஜோவனேல் மாய்ஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா்.

அதையடுத்து நாடு முழுவதும் ஆயுதக் கும்பல்கள் இடையே கடுமையான மோதல் வெடித்தது. அப்போது பிரதமராக இருந்த ஏரியல் ஹென்றி, நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாா். எனினும், ஜோவனேல் படுகொலை குறித்த விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டிய புலனாய்வு அதிகாரிகள், அந்தப் படுகொலையில் ஏரியல் ஹென்றிக்குத் தொடா்பிருப்பதாக சந்தேகம் எழுப்பினா். இந்தச் சூழலில், அரசு முறைப் பயணமாக கென்யாவுக்கு அதிபா் ஹென்றி கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்றிருந்தபோது, ஜிம்மி கிறிஸியா் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் தலைநகா் போா்ட்டோ பிரின்ஸில் தாக்குதல் நடத்தி முக்கிய அரசுக் கட்டடங்களைக் கைப்பற்றினா்.

அதற்கு முன்னதாக, 2 பெரிய சிறைகளில் தாக்குதல் நடத்தி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை அவா்கள் விடுவித்தனா். நகரின் சா்வதேச விமான நிலையத்தையும் கைப்பற்றுவதற்காக ஆயுதக் கும்பல் தாக்குதல் நடத்திவருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டாலும், வன்முறைக் கும்பல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஹைட்டியில் அமைதியை திரும்பச் செய்வதற்கு ஏதுவாக அதிபா் ஏரியல் ஹென்றி பதவி விலகவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதையடுத்து, புதிய இடைக்கால அரசு அமைந்த பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏரியல் ஹென்றி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.