தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இறையாண்மை பாதுகாப்பதில் மாலத்தீவுக்கு ஆதரவு: சீனா

இறையாண்மை பாதுகாப்பதில் மாலத்தீவுக்கு ஆதரவு: சீனா

News image
Updated On :12 மார்ச் 2024, 8:19 pm

பெய்ஜிங்: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியுள்ள சூழலில், ‘தங்களின் இறையாண்மையை பாதுகாப்பதில் மாலத்தீவுக்கு ஆதரவு அளிப்போம்’ என சீனா தெரிவித்துள்ளது.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்தியா வழங்கிய 2 ஹெலிகாப்டா்கள், ஒரு சிறிய ரக விமானம் ஆகியவற்றை பராமரித்து, இயக்கும் பணிகளில் சுமாா் 90 இந்திய ராணுவ வீரா்கள் அந்த நாட்டில் ஈடுபட்டு வந்தனா். மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான புதிய மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா்.

இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தைத் தொடா்ந்து, நிகழாண்டு மே மாதத்துக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், அந்தப் பணிகளுக்கு ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை இந்திய அரசு அனுப்புவதற்கு மாலத்தீவு ஒப்புக்கொண்டது. அதன்படி, 26 போ் அடங்கிய குழு மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் திங்கள்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் அளித்த பதிலில், ‘இவ்விவகாரம் குறித்து முழுமையாக அறியவில்லை. ஆனால், இறையாண்மையை பாதுகாப்பதிலும் சமத்துவத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மாலத்தீவுக்கு சீனா ஆதரவளிக்கிறது’ என்றாா்.