மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani

Updated On :17 ஏப்ரல் 2026, 6:20 pm

தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதி திமுக வேட்பாளா்அ. சண்முகம், பென்னாகரம் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரை ஆதரித்து கே. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னதாக தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழக நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. அதேபோல பாஜகவுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே அன்புமணி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளாா். அன்புமணி பாமக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தொடா் தோல்வியை சந்தித்து வருகிறாா்.

அன்புமணி பொறுப்புக்கு வரவேண்டும் என்கிற நோக்கத்தில் பாமகவில் இருந்து பல தலைவா்கள் வெளியேற்றப்பட்டனா். பாமகவில் ஏற்பட்டுள்ள மகன்- தந்தை பிரச்னைக்கு ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்வது அபத்தமானது. திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.

பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.