சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதிகரிக்கும் துப்பாக்கி உரிமையாளர்கள் எண்ணிக்கை: ஆபத்து என்ன?

உரிமம் பெற்ற இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்

News image
பழைய ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனரைக் கைது செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்- AP
Updated On :19 மார்ச் 2024, 1:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய அத்துமீறலுக்கு பிறகு 1 லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய இடாமர் பென்-க்விர், இதுவொரு மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ”இன்றைக்கு இஸ்ரேல் தெருக்களில் மக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதைப் பார்க்கிறோம், அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் தடுக்கவும் அவர்களால் முடியும்” என தெரிவித்தார்.

போருக்கு முன்னர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீவிர தேசியவாதியான பென்-க்விர் இஸ்ரேலியர்களை ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

போர் ஆரம்பித்த பிறகு இஸ்ரேலியர்கள் ஆயுத உரிமங்கள் பெறுவதற்கான நடைமுறையை இஸ்ரேல் நாடாளுமன்றம் எளிதாக்கியது.

இன்னும் கூடுதலாக 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் அபரிமிதமான எண்ணிக்கையில் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பது எதிர்பாராத துப்பாக்கிச்சூடு, வன்முறை மற்றும் உள்ளூர் மீறல்களுக்கு வழிவகுக்கும் என உரிமைகள் சார்ந்த குழுக்கள் எச்சரித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.