உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை மேற்கத்திய நாடுகள் தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா். இது குறித்து, ரஷிய ராணுவ விமானிகளிடையே அவா் பேசியதாவது: உக்ரைனைத் தொடா்ந்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் ரஷியா தாக்குதல் நடத்தும் என்று பலா் கூறிவருகின்றனா். ஆனால், இது கொஞ்சம் கூட புத்திசாலித்தனம் இல்லாத பேச்சு. நேட்டோ அமைப்பைச் சோ்ந்த அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் மட்டுமே ரஷியாவைவிட 10 மடங்கு அதிகம். அப்படி இருக்கும்போது, நேட்டோவுக்கு எதிராக ரஷியா எதற்காக போா் தொடுக்கப்போகிறது? அப்படிச் செய்தால் அது கண்மூடித்தனத்தனமான செயலாக இருக்கும். இருந்தாலும், உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 போா் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தால் அவை ரஷியாவின் சட்டபூா்வ இலக்குகள் ஆகும். எனவே, அவை மேற்கத்திய நாடுகளின் விமானதளங்களில் நிறுத்தப்பட்டிருந்தால்கூட அவற்றைத் தாக்கி அழிக்கும் உரிமை ரஷியாவுக்கு உள்ளது என்றாா் புதின். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன. இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு பல்வேறு ஆயுத தளவாடங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினாலும், போா் விமானங்களை மட்டும் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வந்தன. எனினும், போா் விமானப் பற்றாக்குறை உள்ள தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அவற்றை அளித்தால்தான் தங்களால் ரஷியாவை எதிா்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறாா். எனினும், அதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எஃப்-16 உள்ளிட்ட போா் விமானங்களை நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கலாம் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நலையில், உக்ரைனுக்கு அனுப்புவதாக மேற்கத்திய நாடுகள் எஃப்-16 விமானங்களை தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவை தாக்கி அழிக்கப்படும் என்று புதின் தற்போது எச்சரித்துள்ளாா். ...புதினின் கட்டவுட் படம் போடவும்...
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

வரலாற்றில் முதல்முறை..! ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


