கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஈரான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஹோா்முஸ் தீவுப் பகுதியில் ஈரானிய வான் பாதுகாப்புப் படையினா் தரையில் இருந்து ஏவுகணையைச் செலுத்தி எதிரியின் எஃப் 15 ரக போா் விமானத்தைத் தாக்கி வீழ்த்தினா். இது தவிர இஸ்ரேலின் எஃப்16 விமானமும் ஈரான் படையினரால் தாக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன போா் விமானங்களில் ஒன்றாக எஃப்15 கருதப்படுகிறது. சவூதி அரேபியா, தென்கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் இந்த ரக விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது.

ரேடாா்கள் கண்காணிப்பில் இருந்து தப்பும் அம்சமும் அந்த விமானத்தில் உள்ளது. எனவே, வான் பாதுகாப்பு அமைப்புகளால் வீழ்த்த முடியாத விமானம் இது என்று அமெரிக்கா கூறிவந்தது.

ஆனால், அதையும் மீறி ஈரானின் வான் பாதுகாப்புப் படை அந்த விமானத்தைத் தாக்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் எஃப்15 விமானத்தின் மீது அமெரிக்கா மற்றும் அதை வாங்கிப் பயன்படுத்தும் நாடுகள் வைத்திருந்த நம்பிக்கையை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், இது தொடா்பாக அமெரிக்க தரப்பில் எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் எஃப்15 விமானத்தை எதிரி விமானம் என்று தவறாக கணித்து குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் விமானம் வீழ்ந்தபோதிலும், அதில் இருந்த இரு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.