ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
Updated On :29 மார்ச் 2024, 5:51 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.11 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.04, தீா்க்கரேகை 71.19-இல் பூமிக்கு 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.36 மற்றும் தீர்க்கரேகை 71.18 இல் பூமிக்கு 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.