இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி

News image
தெற்கு இஸ்ரேலில் காஸா எல்லைக்கருகே இஸ்ரேல் ராணுவ வீரர்கள்
Updated On :1 மே 2024, 3:01 pm

DIN

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் துருக்கி அதிகாரப்பூர்வமாக இணைவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்பின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹக்கன், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கில் துருக்கி தலையீட இருப்பதாகவும் அதற்கான நடைமுறைகள் முடிந்ததும் துருக்கி வழக்கில் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹக்கன், “இந்த நடவடிக்கை மூலமாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைமுறைகள் சரியான திசையில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் படுகொலை மாநாட்டின் நெறிமுறைகளை மீறி இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்திவருவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் துருக்கியும் ஒன்று. உலக அரங்கில் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஹமாஸ் குழுவை பாலஸ்தீன நிலம் மற்றும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என துருக்கி தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.