பாரிஸ் மக்களின் அலைபேசிகளுக்கு திடீர் எச்சரிக்கை ஒலி அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருந்தபோதும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒலி வந்தது அவரது பேச்சை இடைநிறுத்தியது.
‘அதிதீவிரமான எச்சரிக்கை’ என அலைபேசிகளுக்கு வந்த குறுஞ்செய்தியில், “முக்கிய அறிவிப்பு: ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு எல்லை குறித்த உள்துறை அமைச்சகத்தின் குறுஞ்செய்தி” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மக்கள், ஊழியர்கள், கடைக்காரர்கள், உணவகங்கள் விருந்தினர்கள் இந்த தளத்தில் இணையுமாறும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்து அறியவும் அதில் வலியுறுத்தப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு பாரிஸில் ஜுலை 18 முதல் ஜுலை 26 வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாரிஸின் சீன் நதியில் ஜுலை 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. இதுவரை வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது பிரான்ஸ். அதன் ஒரு பகுதியாகவே இந்த குறுஞ்செய்தி சோதனையும் என தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஒலி அபாயம் குறித்து விழிப்புணா்வு

சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று! அலறியடித்து ஓடிய விளையாட்டு வீரர்கள்!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


