சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல்: யோவாவ் கலன்ட் கருத்து

News image
பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலன்ட்
Updated On :21 மே 2024, 1:15 pm

DIN

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலன்ட் கைது செய்யப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் முன்வைத்த கோரிக்கையை யோவாவ் கலன்ட் செவ்வாழ்ய்க்கிழமை விமர்சித்துள்ளார்.

இரு தரப்பு மேல்மட்ட தலைவர்களை கைது செய்யவேண்டும் என்கிற வழக்குரைஞரின் கருத்துக்கு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒன்றாக பாவிப்பது அருவருக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்தின் அங்கமில்லை. அதன் அதிகாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யோவாவ், “இஸ்ரேலின் தற்காப்பு உரிமை மற்றும் காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் உரிமையை மறுக்கும் வழக்குரைஞர் கரீம் கானின் கோரிக்கை வெளிப்படையாக மறுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

7 மாதங்களாக நடைபெறும் காஸா போரில் நெதன்யாகு, அவரது பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலைவா்களான யேஹ்யா சின்வா், முகமது தெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோா் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கைது செய்யுமாறு கரீம் கான் சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கோரிக்கை வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.