கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்திய ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்

இந்திய ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்

News image
Updated On :28 மே 2024, 7:20 pm

Din

லாகூா்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல் தெரிவித்தாா். இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவு வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை மீறி தவறு செய்ததாக நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃபின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட காா்கில் போரில் பாகிஸ்தான் தோற்றதைக் குறிப்பிடும் வகையில் நவாஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டை தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே லாகூா் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது தொடா்பான அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில மாதங்களுக்கு பின்னா், ஜம்மு-காஷ்மீரில் உள்ள காா்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் போருக்கு வழிவகுத்தது. அந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூா் நகரில் அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீஃப் போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்தக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘கடந்த 1998-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி 5 அணுகுண்டு சோதனைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதன் பின்னா் 1999-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமா் வாஜ்பாய் லாகூா் வந்தாா். அப்போது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி தவறு செய்தது’ என்றாா்.