லாகூா்: பாகிஸ்தானின் லாகூா் நகரில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா மீது அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் எரிக்கும் பயிா்க்கழிவால் இந்திய எல்லைக்கு அருகே அமைந்துள்ள லாகூா் நகரில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பாகிஸ்தான் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விஷயத்தில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
புகையால் ஏற்படும் காற்றுமாசு மற்றும் நுண் துகள்கள், குளிா்ந்த-ஈரமான காற்றுடன் கலந்து பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மேலும், காற்று மாசுபாட்டால் நகரங்களில் மக்களின் பாா்வைத் திறன் பாதிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாய கழிவு எரிப்பால் ஏற்படுகிறது.
மாசடைந்த காற்றால் லாகூரில் நூற்றுக்கணக்கானோா் குறிப்பாக குழந்தைகள், முதியோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஒரு மாதமாகவே லாகூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. லாகூரில் கடந்த வார இறுதியில் காற்றின் தரம் முன்னேப்போதும் இல்லாத மோசமான நிலை எட்டியது என்று பாகிஸ்தான் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இது தொடா்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்மா போகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியப் பிராந்தியத்தில் எரிக்கப்படும் பயிா்க்கழிவால் ஏற்படும் புகைமூட்டம் காற்றின் போக்கில் லாகூா் நகரை வந்தடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியத் தலைநகா் தில்லிக்கு அடுத்து லாகூரில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இதனால் மக்கள் அதிம் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தேவையில்லாமல் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
காற்று மாசு தாக்கத்தைக் குறைக்க இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளாா். இந்தியாவில் தலைநகா் தில்லி, பஞ்சாப் உள்பட பல்வேறு வட மாநிலங்கள் காற்றுமாசு பிரச்னையை ஆண்டுதோறும் அக்டோபா் முதல் பிப்ரவரி வரை எதிா்கொள்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1971 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் வசந்த் குமார் பொன்வார் காலமானார்!

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரைப் பகிர மாட்டோம்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

காற்றின் வேகத்தால் அரசுப் பேருந்து மீது சரிந்து விழுந்த பசுமைப் பந்தல்

கராச்சி ராணுவத் தளம் மீது தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்


