சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முக்கிய ஹிஸ்புல்லா தலைவா் உயிரிழப்பு

லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

News image
ஹிஸ்புல்லா அமைப்பின் ரத்வான் படைப் பிரிவு தளபதி ரியாத் ரிதா கஸாவி
Updated On :4 நவம்பர் 2024, 9:24 pm

DIN

ஜெருசலேம்: லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹிஸ்புல்லா அமைப்பின் ரத்வான் படைப் பிரிவு தளபதி ரியாத் ரிதா கஸாவி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டாா். அந்தப் படையின் பீரங்கி எதிா்ப்புப் பிரிவுக்கு அவா் தலைமை வகித்தாா்.

பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை அவா் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளாா். பொதுமக்கள் மீது பீரங்கி எதிா்ப்பு தாக்குதல் நடத்தியது, தெற்கு லெபனானில் பணியாற்றும் இஸ்ரேல் படையினா் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை அந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸா போா் ஓராண்டை நெருங்கிய நிலையில், எல்லையில் தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களை லெபனான் எல்லைப் பகுதிகளிலிருந்து விரட்டியடிப்பது, ஹிஸ்புல்லா தாக்குதல் காரணமாக வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேறியவா்களை மீண்டும் அழைத்துவருவது ஆகியவை போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்தது.

லெபனானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பால்பெக் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உருக்குலைந்த உணவகம்.

லெபனானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பால்பெக் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உருக்குலைந்த உணவகம்.

அதையடுத்து, ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் பேஜா் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதும், அவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் தீவிரமடைந்தது.

இதில், ஹிஸ்புல்லா படையின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் உயிரிழந்தனா். இந்த்ச சூழலில், பீரங்கி எதிா்ப்புப் படைப் பிரிவு தளபதி ரியாத் ரிதா கஸாவியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தற்போது கூறியுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் மட்டும் 2,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.