வரலாற்றில் முதல் முறையாக சௌதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சௌதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது. பனிப்பொழிவு பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது.
அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத் அல்-ஜந்தல் கவர்னரேட் போன்ற பகுதிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Capturing the blend of sand and hail, these photos from the Ha'il-Rafha road, taken on Saturday afternoon in 2024.
— Najdean Memoirs (@NajdiMemoirs) November 3, 2024
ð¸Hamad Al-Saloom. pic.twitter.com/UaGwKmKVQ3
தொடர்ந்து பெய்து வரும் மழை, ஆலங்கட்டி மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டு தாவரங்களுக்கு பெயர் பெற்ற நகரமான அல்-ஜவ்ஃப், இந்த அசாதாரண ஈரப்பதத்திலிருந்து பயனடையக்கூடிய லாவெண்டர் மற்றும் கிரிஸான்தமம் போன்ற பூந்தாவரங்கள் அதிகளவில் விளையும் என்று ஏராளமாக எதிர்பார்க்கிறது.
தேசிய வானிலை ஆய்வு மையமும் அல்-ஜவ்ஃப் பகுதியில் மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வானிலை காரணமாக பார்வைத்திறன் குறையக்கூடும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதத்திலும் அசாதாரணமான பனிப்பொழிவு காணப்பட்டது. தபூக் நகரின் வடமேற்கே உள்ள அல்-லாஸ் மலைகளும் பனியால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 நாடுகள் உடன் கைகோக்கும் சௌதி! உருவானது செங்கடல் பாதுகாப்பு கூட்டணி!
சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

சௌதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம் அதிகரிப்பு

செங்கடலில் சௌதியின் கப்பல் மீது ஹௌதிகள் தாக்குதல்! உருவாகிறதா புதிய போர்?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



