45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஹிந்துக்களுக்கு மட்டன், பீர் வழங்கிய பிரிட்டன் பிரதமருக்கு எதிர்ப்பு!

தீபாவளி விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, மாமிசம் வழங்கியதாக பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதர் குற்றச்சாட்டு

News image
தீபாவளி கொண்டாடத்தின்போது விளக்கேற்றிய பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்- Keir Starmer
Updated On :10 நவம்பர் 2024, 8:20 am

DIN

தீபாவளி விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, மாமிசம் வழங்கியதாக பிரிட்டன் பிரதமர் மீது பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 31 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்) பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தின்போது விளக்கேற்றுதல், நடன நிகழ்ச்சிகள், பிரதமரின் உரையும் நடத்தப்படும். இந்த விருந்தில் ஹிந்துத்துவ தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஹிந்து பண்டிகை விருந்தில் மதுவும் மாமிசமும் அளிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவு அட்டவணையில் மட்டன், பீர், ஒயின் முதலானவை இருந்ததாக சில பிரிட்டிஷ் ஹிந்துக்கள் கூறினர். கடந்தாண்டில், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அளித்த விருந்தில் மதுவோ மாமிசமோ இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹிந்து விருந்தில் மது, மாமிசம் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை, முக்கிய பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதரான சதீஷ் கே ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

சதீஷ் கே ஷர்மா, தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, ``கடந்த 14 ஆண்டுகளாக, விருந்து மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தில் மதுவோ மாமிசமோ இல்லை. ஆனால், இந்தாண்டு கொண்டாட்டம், மதுவும் மாமிசமும் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வாக இருந்தது ஏமாற்றமளிக்கிறது.

மது, மாமிசத்தால் புனிதக் கொண்டாட்டமே பாதித்து விட்டது. இந்த சம்பவம் கவனக்குறைவு என்றால் சோகமளிக்கக் கூடியதாக உள்ளது; வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில், விருந்தில் மது, மாமிசம் அளிப்பதன்மூலம் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு பிரதமர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்றுதான் தோன்றும்’’ என்று கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து 10, டௌனிங் ஸ்ட்ரீட் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.