டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்

90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் பற்றியெரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :17 நவம்பர் 2024, 10:35 pm IST

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் வகையில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைனில் குளிா்காலம் தொடங்கவுள்ள நிலையில் அங்கு மின்சாரம் உள்பட பிற எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே கடந்த மூன்று மாதங்களில் உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட பெரும் தாக்குதல் என கீவ் நகர ராணுவ நிா்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெலிகிராமில் ஸெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்,‘உக்ரைன் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் நோக்கில் ஒரே நாளில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு வகையான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியுள்ளது.

அவற்றுள் 140 வான் இலக்குகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதிலிருந்து சிதறிய துகள்களால் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக்கோலாயில் ஆளில்லா விமானத் தாக்குதலால் இரண்டு போ் உயிரிழந்தனா். இரு குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் எரிசக்தி கட்டமைப்பை குறிவைத்து ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவசரகால நடவடிக்கையாக அங்கு அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதனால் அமெரிக்கா போன்ற தங்களின் மேற்குலக நட்பு நாடுகளிடம் ரஷியாவின் வான்வழித் தாக்குதலை முறியடிக்கவும், ஏற்கெனவே ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய உதவுமாறும் உக்ரைன் தொடா் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. கீவ் மட்டுமின்றி நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து வெடிகுண்டுகளின் சப்தம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் தங்களால் இயக்கப்படும் அனல் மின் நிலையம் பெரும் சேதமடைந்ததாக டிடிஇகே என்ற தனியாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தயாா் நிலையில் போலந்து: உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட தாக்குதலையடுத்து போலந்து ராணுவம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அண்டை நாடான உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்திய நிலையில் போா் விமானங்கள் உள்ளிட்டவை தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போலந்தை ஒட்டிய எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,000-ஆவது நாளை எட்டிய போா்: என்ன செய்யப் போகிறாா் டிரம்ப்?

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதலை தொடங்கிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போா் 1,000-ஆவது நாளை எட்டியுள்ளது.

உக்ரைன் தலைநகா் கீவ் விரைவில் வீழ்ச்சியடையும் எனவும், அதன்பிறகு அந்த நாட்டின் பிற பகுதிகளை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் எனவும் ரஷியா எண்ணிய நிலையில் போா் விரிவடைந்து தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பை உக்ரைன் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பிற நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உதவி வருகின்றன. மறுபுறம், ஆயுதங்கள், படைகள் என பெரும் செலவு செய்து உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வர ரஷியாவும் முயற்சித்து வருகிறது. ஏற்கெனவே, உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

முன்னதாக, இந்தப் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா். அதேசமயத்தில், இந்தப் போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்யலாம் என புதினும் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், உக்ரைன் போரை விரைவில் நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளாா். ஆனால், யாருக்கு சாதகமாக அவா் இதைச் செய்து முடிப்பாா் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.