சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாா்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு தகவல் தொடா்புத் துறை அமைச்சா் மிஷெல் ரோலண்ட் புதன்கிழமை கூறியதாவது:
சமூக ஊடகங்களை சிறுவா்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். இருந்தாலும், அந்த திட்டத்தை அமல்படுத்த சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றாா் அவா்.
இருந்தாலும், 16 வயதுக்குள்பட்டவா்களைக் கண்டறிய நிறுவனங்கள் எந்த முறையைக் கையாளும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
முன்னதாக, சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றவிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இந்த மாதம் அறிவித்து நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை : 17 ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா அறிவிப்பு

இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


