திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

மத்திய உள்துறை அமைச்சகம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:46 am IST

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்றத் தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் பொது வெளியில் உள்ள தகவல்களைத்தான் உளவுத்துறை திரட்டுகிறது. சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட அல்லது அந்தரங்க தகவல் எதுவும் திரட்டப்படுவதில்லை. இதில் தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறப்படவில்லை.

இவ்வாறு பொது வெளியில் உள்ள தகவல்களைத் திரட்டும் வழிமுறையானது இணையவழி, வேலைவாய்ப்பு, முதலீடு, திருமண மோசடிகளை கண்டறிவதற்கான இணைய இணைப்புகள், வலைதளங்களைக் கண்காணிக்க உதவும்.

உளவுத் தகவல்களைத் திரட்டும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு முகமைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.