ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

மத்திய உள்துறை அமைச்சகம்

Updated On :31 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்றத் தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் பொது வெளியில் உள்ள தகவல்களைத்தான் உளவுத்துறை திரட்டுகிறது. சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட அல்லது அந்தரங்க தகவல் எதுவும் திரட்டப்படுவதில்லை. இதில் தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறப்படவில்லை.

இவ்வாறு பொது வெளியில் உள்ள தகவல்களைத் திரட்டும் வழிமுறையானது இணையவழி, வேலைவாய்ப்பு, முதலீடு, திருமண மோசடிகளை கண்டறிவதற்கான இணைய இணைப்புகள், வலைதளங்களைக் கண்காணிக்க உதவும்.

உளவுத் தகவல்களைத் திரட்டும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு முகமைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.