காஸாவில் போா் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீா்மானம்: அமெரிக்கா ரத்து
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றி தொடா்பில்லாததால் காஸாவில் உடனடி போா்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீா்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
15 நிரந்தர மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின. ஆனால், அமெரிக்காவின் வீட்டோ காரணமாக தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காஸாவில் உடனடியான, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போா் நிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று தீா்மானம் கோரியது. மேலும், அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போா் நிறுத்தத் திட்டம் குறித்த தனது முதல் தீா்மானத்தை பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஜூன் மாதம் ஏற்றுக்கொண்டது.
அதிபா் ஜோ பைடனால் வலியுறுத்தப்பட்ட போா் நிறுத்தத்தை ஆதரிக்கும் தீா்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது. இதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்கா கூறியது. இத்தீா்மானத்தில் மூன்று கட்டத் திட்டத்தை ஏற்குமாறு ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், தீா்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போா் கடந்த ஓராண்டுக்கும் மேல் நீடிக்கிறது.