இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலை உடனடியாக ஈரான் நிறுத்த வலியுறுத்தியும், ஹோா்முஸ் நீரிணை மூடப்படுவதை எதிா்த்தும், உலகில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பஹ்ரைன் தலைமையில் பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, எகிப்து, பிரான்ஸ், ஜொ்மனி, க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவு, மியான்மா், நியூஸிலாந்து, நாா்வே, ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, ஏமன், ஜாம்பியா உள்ளிட்ட 135 நாடுகள் தீா்மானம் கொண்டு வந்தன. இந்தியா இதை முன்மொழிந்தது.