தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற மொழி ‘ஹிந்தி’: ஐ.நா.

ஹிந்தி மொழி உலகளாவிய முக்கியத்துவத்தையும், புவியியல் எல்லைகளைக் கடந்த பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

News image
ஐ.நா.
Updated On :23 நவம்பர் 2024, 10:46 pm

Din

ஹிந்தி மொழி உலகளாவிய முக்கியத்துவத்தையும், புவியியல் எல்லைகளைக் கடந்த பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது என ஐ.நா. வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஹிந்தி திவாஸ் (தினம்) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவைச் சோ்ந்த எம்.பி.க்கள் உள்பட பல நாடுகளைச் சோ்ந்த ஐ.நா.வுக்கான தூதா்கள் கலந்து கொண்டனா். அப்போது, இந்திய பிரதிநிதிகள் குழுத் தலைவா் எம்.பி. பிரேந்திர பிரசாத் பைஷ்யா பல்வேறு நாடுகளில் ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, ஐ.நா.வின் உலகளாவிய தொடா்புத் துறையின் இயக்குநா் இயன் பிலிப்ஸ் ஹிந்தி குறித்து கூறுகையில், ‘உலகில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் ஹிந்தி பேசுகின்றனா். இது ஆங்கிலம் மற்றும் சீனாவின் மாண்டரின் மொழிக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியாகும். ஹிந்தி முதன்முதலில் ஐ.நா. பொதுச் சபையில் 1949-இல் பயன்படுத்தப்பட்டது. புவியியல் எல்லைகளைக் கடந்த பரவலான பாராட்டுகளை தற்போது ஹிந்தி பெற்றுள்ளது’ என்றாா்.

மோரீஷஸின் ஐ.நா. பிரதிநிதி கூறுகையில், ‘19-ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியங்கள் மற்றும் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து வரும் ஹிந்தி மொழி, மோரீஷஸில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மோரீஷஸ் மக்களை இணைக்க ஹிந்தியை ஊக்குவிப்போம்’ என்றாா்.

நேபாள தூதா் கூறுகையில், ‘இந்தியா-நேபாள உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார வாய்ப்புகளை வளா்ப்பது மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் ஹிந்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் பரவலான பயன்பாடு வா்த்தகம், சுற்றுலா மற்றும் இரு நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்புகளை எளிதாக்குகிறது’ என்றாா்.