ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரேல் தாக்குதல்: வடக்கு காஸாவில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

News image
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக கட்டடங்கள்- AP
Updated On :27 அக்டோபர் 2024, 4:01 am

DIN

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

குடியிருப்புப் பகுதி அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்தன. தாக்குதலுக்குள்ளான இடத்தில் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் உள்ளூர் மக்கள் கழுதைகள் மூலம் உடல்களைக் கொண்டுவந்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினரின் ஆதரவு பெற்ற பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையினரை அழிக்கும் நோக்கத்தில் காஸா எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே வடக்கு காஸாவில் உள்ள பெயிட் லாஹியா பகுதியில் இஸ்ரேல் நேற்று நள்ளிரவு வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்ததாக அந்நநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், குடியிருப்பு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகள் நேரிட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் செல்ல முடியவில்லை என்றும், இதனால் கழுதைகள் மற்றும் வண்டிகள் மூலம் உடல்களை அப்பகுதியினரே மீட்டு வருவதாகவும் வாஃபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இப்போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.